Monday, December 14, 2009

தமிழில் சில

இன்றைய அவசர உலகத்தில் நாம் கோவிலுக்கு செல்வது கூட இயலாமை என
சிலர் வருத்தப்படலாம். ஒரு சிலரோ தெய்வம் என்பது மனதில் மட்டும் நினைத்தால் போதும் என்பர்.

ஏதோ ஒன்று.... கோவிலுக்கு சென்றாலும் சரி அல்லது மனதில் நினைத்தாலும் சரி.....
நாகரீகமாக ஐபாட் மூலமாக mp3 திரைப்பட பாடல்கள் கேட்கும்போது சிறிது தெய்வத்திற்கும் ஒதுக்கலாமே......

நீண்ட நாட்களாக மிகவும் போற்றப்பட்ட தேவாரமும் திருவாசகமும் தற்காலத்தில் பாடலாக கேட்பதற்கு அரிதாகிவிட்டது....

அவற்றில், கோளறுபதிகம் எனும் பாடல் பாடும்போது சகல நோய்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

இங்கே திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய கோளறு பதிகம்
பாடலை இணைதுள்ளேன். அதையும் கேட்டுப் பாருங்களேன்.
20 நிமிடம் பாடக்கூடியது.... தவிர்க்கமுடியாத காரணத்தால் 112kpbs bitrate ல்
மட்டுமே அப்லோட் செய்துள்ளேன்.

பதிவிறக்கம்:

http://www.mediafire.com/?ymzyi4xjkda
(or)
http://www.mediafire.com/file/ymzyi4xjkda/kolaruPathigam.mp3


இன்றைய நகச்சுவை:


நம்ம பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.

நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பண்ணிகிறானா இல்ல
கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உட்றது ? சொர்க்கமா நரகமா னு
பயங்கர கன்ஃபூஷன். ...

நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு...

‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு.
அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான்
விண்டோஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே…,,,,,,,
நம்மளாண்ட உன் மேலுகா
வந்த சாபம் கன்னா பின்னானு கீது....... அதனால உன்னை நரகத்துக்கு தான்
அனுப்பணும்..... எனுக்கு சர்யா தெர்ல..... அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்க்கு என்னா
வேணும்னு.... ..‘ கடவுள் சொன்னார்.

பில்கேட்ஸ் குஷியாய்ட்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி
இருக்கும்ன்னு தெரியாதே... ( விண்டோஸ் ஒரு நரகங்கிறதை தவிர ).... அதனால
கடவுள் கூட்டிட்டு போனாரு.

முதல்ல நரகம்.

ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ்க்கு குஷி... அந்த பக்கம்
பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல வாலிபால் விளையாடிட்டு இருக்காங்க ... இந்த பக்கம் பார்த்தா பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து ஜாலியா வாக் பண்ணிட்டு இருக்காங்க.
பில்லு செம குஷியாய்ட்டாரு....

ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?....

கடவுள் அவரை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.....

அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.
ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு…

சரி.. கடவுளே… நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள்
அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,...

கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க
நரகத்துக்கு போனாரு....

"அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல
கேட்ஸ்" னு கடவுள் பாடிட்டே போனா.... கேட்ஸ்க்கு கடுப்பு....

யோவ் கடவுளே.... என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியே… னு
கத்துனாரு.... கடவுளுக்கு புரியல..

இன்னாபா.... இன்னா மேட்டரு..... கடவுள் கேட்டாரு.

அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி
பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு....
நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.

கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி....அதப்பாத்துதான்
நீ அங்க போகனும்னியா.....

அது நரகத்தோட ஸ்க்ரீன்சேவர் டா......






Friday, December 11, 2009

சிறிய தகவல்

பிரபல பற்பசை நிறுவனம் "கோல்கேட்" பற்றி தெரியும்.. ஆனா அவங்க ஸ்பானிஷ் மொழி பேசற மக்கள் கிட்ட தங்கள் தயாரிப்பை விற்க முடியலே.. அது தெரியுமா..?ஸ்பானிஷ்'லே 'கோல்கேட்'ன்னா "போய் தூக்குல தொங்கு"ன்னு அர்த்தம்...!
-----------------------------------------------------------------------------------------------
இன்னிக்கு காலையிலே 7 மணிக்கு டோக்யோ' லேருந்து விமானத்திலே கிளம்பினா நேத்திக்கு சாயங்காலம் 4.30 க்கு ஹானலுலூ-வுக்கு போய் சேர்ந்திடலாம்.. ஆச்சரியமா இருக்கா..?சர்வதேச நேர அமைப்பு அப்படி...!

இன்றைய நகச்சுவை

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,“இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”
“முதலில் செல்வது எனது மனைவி.”
“என்ன ஆயிற்று அவருக்கு?”
“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”
“இரண்டாவது பிணம்?”
“அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”
உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
“இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய் நில்லுங்கள்...!!!

Thursday, December 10, 2009

மைக்ரோசாஃப்டின் அருமையான படைப்பு

பொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து(reengineering
செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் என்ற பெயர் உள்ளது.அந்த பெயரை மாற்றும்
வகையில் தற்போது Project Natal என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.

கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii.
விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி
செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான
வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.அதற்கு தான் Project
Natal என்று பெயர்.

இந்த விளையாட்டை விளையாட எந்த சென்சார்களையும் உடலில் அணிய வேண்டியது இல்லை.
மேலும் மற்ற விளையாட்டை போல கையை மட்டும் பயன் படுத்த வேண்டியது இல்லை.நம்
உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன் படுத்தலாம். நம் உடலின்
அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம்
கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம்
செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான
விளையாட்டு போல் உணர செய்கிறார்கள்.

நான் கூறுவதை கேட்பதை விட மைக்ரோசாப்ட்டின் இந்த demo வீடியோவை நீங்களே
பாருங்களேன்! அருமையாக உள்ளது. உண்மையிலேயே
நம்பவே முடியவில்லை.

தளம்:

http://www.youtube.com/watch?v=I9tmr8VDqN8



இன்றைய நகைச்சுவை

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப் பரிசு..
"ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..
".மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்..
"போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?"
மாமியார் செத்துட்டுது..
மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!

எளிய தமிழ் தட்டச்சு

எளிய முறையில் தமிழில் தட்டச்சு செய்ய மிகவும் ஒரு அருமையான
software ஒன்று இங்கு இணைத்துள்ளேன். இதன்மூலம் நீங்கள் தமிழில்
டைப் செய்ய விரும்பும் வார்த்தைகளை நேரடியாக ஆங்கில வார்த்தைகளை
டைப் செய்தாலே பெறமுடியும்.

உதாரணம்: "வணக்கம்" எனும் வார்த்தை தேவைப்படும்போது vaNakkam என
ஆங்கிலத்தில் டைப் செய்தாலே தமிழில் கிடைக்கும்.

இதற்கு எந்த விதமான தனிப்பட்ட font தேவையில்லை. நீங்கள் இந்த
software ஐ உபயோகப்படுத்தி உங்களுடைய எவ்வகையான windows
பயன்பாட்டிலும் தமிழ் வார்த்தைகளை பெறலாம்.

உம்: MS Word, Excel, Yahoo messenger and all Internet browsers.

இந்த software மூலம் தயாரித்த தமிழ் ஆவணங்களை எல்லா விதமான
E-Mail மற்றும் பிற computerகளிலும் எளிமையாக படிக்க முடியும்.

காரணம் இதில் Latha எனும் Font மூலம் தமிழ் வார்த்தைகள்
உருவாக்கப்படுகிறது. இந்த Latha font விண்டோஸின் ஒரிஜினல்
font ஆகும். ஆகவே தனிப்பட்ட font நிறுவ தேவையில்லை.
இவை windows xp முதல் windows 7 வரை அனைத்திலும்
இயங்கும்.

Download மற்றும் செயல்பாட்டிற்கு கீழ்காணும் தளத்தை அணுகவும்

தலைமை தளம்:
www.azhagi.com/

பதிவிறக்கம்:
http://www.azhagi.com/sai/Azhagi-Setup.exe


இன்றைய நகச்சுவை

வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...
அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?
அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..
நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..
இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!
பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? .. விலையைச் சொல்லு..!
சொன்னா கேளுங்க.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!
வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!எஜமானிக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..
கிளி.." புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..
கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...
புது வீடு..புது எஜமானியம்மா..புது குழந்தைங்க..புது காரு... அடடே.. வாங்க பார்த்த சாரதி.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???

Tuesday, December 8, 2009

வணக்கம்


வணக்கம் தமிழ் நண்பர்களே

முதன் முறையாய் தமிழில் Technical சம்பந்தமாகவும் computer சார்ந்ததுமான
ஒரு blog துவங்கி உள்ளேன்.